Wednesday, October 31, 2007

யதார்த்தம்

வானம்
அழுதுக் கொண்டிருந்த
நாளொன்றில்,
முறிந்துபோன
உன் காதல் கதையை
என்னிடம்
சொல்லி அழுதாய்.
சமயம்
கூடிக்கிடப்பதை உணர்ந்து
உனைத் தேற்றி
என் காதலைச்
சொல்ல முனைகையில்,
சட்டென,
மேகம் விலகி
சூரியன் சுட்டது..!

0 comments: