Thursday, January 06, 2011

ரகசியம்

கைபேசி வாங்கிய புதிதில்
அம்மாவென்று பெயரிட்டு
அம்மாவின் எண்ணையும்
அப்பாவென்று பெயரிட்டு
அப்பாவின் எண்ணையும்
சேமித்துவைத்தேன்
நாளடைவில்
அம்மாவின் எண்ணை அழைத்தால்
அப்பாவும்
அப்பாவின் எண்ணை அழைத்தால்
அம்மாவும் பேசினார்கள்
காதலித்து மணமுடித்தவர்களை
எப்படியெல்லாம் காதலித்தீர்கள் எனக்
கேட்கும்போதெல்லாம்
வெட்கப்பட்டவர்களின் ரகசியத்தை
அழகாக அம்பலமாக்கியது
கைபேசி!

நன்றி: ஆனந்த விகடன்

2 comments:

கார்க்கி said...

கலக்குற சந்துரு.. குட் ஒன்

Shunmuga Sundar said...

அழகான கவிதை :-) வாழ்த்துக்கள் :-)