Friday, April 01, 2011

பார்வை

உனை மூன்றாவது முறையாக
பார்க்க நேரிடுகையில்
அன்றைய தவணை
நன்றே முடிவடைகிறது
அதற்கடுத்து நிகழும்
ஒவ்வொரு சந்திப்பும்
பின்நாளிற்கான
சேமிப்பில் குவிகிறது
பார்க்காத நாளொன்றில்
சேமிப்பும் தீர்ந்துவிடுகையில்
நீ எங்கிருந்தாலும்
உனை தேடிவந்து
பார்க்க வைப்பது என்னவோ
உன் பார்வையும்
ஒரு இனம்புரியாத காரணமும்!

0 comments: