Monday, June 13, 2011

பித்து

துள்ளிக் குதிக்கிறேன்
ஒரு வண்ணத்துபூச்சியிடம்
செல்லச் சண்டையிடுகிறேன்
பூக்களுக்கெல்லாம்
வணக்கம் சொல்கிறேன்
சிட்டுக்குருவியின் கால்களைப்பற்றி
பறந்து செல்கிறேன்
அத்தனை பற்களும்
தெரியும்படி சிரிக்கிறேன்
சுற்றித்திறிந்து பின்
மீண்டும் இருக்கைக்கு வந்து
காலையில் நீயனுப்பிய
மின்னஞ்சலை
எண்பதாவது முறையாக
படிக்கிறேன்!

2 comments:

தங்கம்பழனி said...

நானும் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறேன்.. தங்களின் கவிதையைப் படித்து...

பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.!!

Arun Nandha Kumar S said...

Nice da...