நீ இன்னமும்
சிரித்துக்கொண்டுதானிருக்கிறாய்
தினம் முன்னூருமுறை
பேசிக்கொள்கிறோம்
நாளுக்கொரு
கவிதையெழுதுகிறேன் நான்
குழந்தையென கொஞ்சுகிறேன்
உன்னை
கோபங்கொண்டும் சண்டையிட்டும்
மௌனங்கொண்டும்
விளையாடுகின்றோம்
தீராத புன்சிரிப்பும்
உன் நினைவில் ஊரிய கனமும்
அழற்சியில் நீகொடுக்கும்
புதுமையும்
இன்பமான இரவில்
ஓர் நெடுங்கனவென
தொடர்கையில்
என்னருகில்
நீயிருப்பதும் இல்லையென்பதும்
தேவையற்ற கேள்விக்குறி..
Warangal - Summer 2009
3 days ago